இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
விடுவிக்கப்பட்டபோதும், அவர்கள் வாக்குத்தத்தம்
பண்ணப்பட்ட கானான் தேசத்தில் பிரவேசித்தபோதும்,
யோசியா ராஜாவும், எசேக்கியா ராஜாவும் விக்கிரகங்களை
வழிபட்டபின் தேவனிடத்தில் திரும்பியபோதும்,
இஸ்ரவேலர்கள் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோதும்கூட,
பஸ்காதான் மையமாக இருந்தது.
அதுபோலவே, இன்றும் பஸ்காவின் வாயிலாக தேவனுடைய இரட்சிப்பின்
கிரியை வெளிப்படுகிறது.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு தம் சீஷர்களுடன்
ஆசரிக்க மிகவும் ஆசையாயிருந்த புதிய உடன்படிக்கையின் பஸ்கா,
மதம் மற்றும் அரசியலுக்கு இடையேயான கூட்டுச்சதியால்,
கிபி 325ல் அழிக்கப்பட்டு, இருளில் மறைந்துபோனது;
இருந்தாலும், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே,
கிறிஸ்து அன்சாங்ஹோங் வந்து பஸ்கா வாயிலாக இரட்சிப்பின் பணியைத் தொடங்கினார்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி:
நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட
இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
லூக்கா 22:15
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே,
சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப்
புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்
பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்
போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது,
உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை
ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
மத்தேயு 26:17–18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை