ஆதாமும் ஏவாளும் நன்மைத் தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து புசித்து மரித்தது, சிலுவையில் வலது பக்கத்தில் அறையப்பட்ட கள்ளன் இரட்சிக்கப்பட்டது; இரண்டு குருடர்கள் குணமடைந்து; பன்னிரெண்டு வருட பெரும்பாடுள்ள ஸ்திரீ சொஸ்தமானது, மேலும் பஸ்கா அப்பத்திலும் திராட்சரசத்திலும் கலந்து கொள்வதின் வாயிலாக இயேசுவின் மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தை பானம்பண்ணி நித்திய ஜீவனைப் பெறுவது இவை அனைத்தின் வாயிலாக தேவனுடைய வார்த்தையின் வல்லமையை நம்மால் காண முடியும்.
குமாரனின் காலத்தில், கூடாரப் பண்டிகையின் கடைசி நாளான பிரதான நாளில் தம்மிடம் வந்தவர்களுக்கு இயேசு மட்டும் தனியாக ஜீவத்தண்ணீரைக் கொடுத்தார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், ஆவியானவராக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங், மற்றும் மணவாட்டியாக வந்த தாயாகிய தேவனிடம் வருபவர்கள் ஜீவத்தண்ணீரை அதாவது பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள் அவர்களே எல்லாவற்றையும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையால் நிறைவேற்றக்கூடியவர்கள்.
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
யோவான் 7:37–39
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்துதல் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை